காதலியை கொன்று நாய்க்கு உணவாக போட்ட வழக்கு! காதலனுக்கு 22 வருட சிறை தண்டனை!
Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 10 மார்ச், 2013 | AM 6:39
பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் புரூனோ பெர்னாண்டஸ் டி சோசா. வயது 28. அடுத்த 2014ம் வருட உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் நாட்டிற்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் மீது முன்னாள் காதலியை கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவரது காதலி சாமுடியோவுக்கும் இவருக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு தேவையான ஆதரவை வழங்க கோரி காதலி வற்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த டி சோசா அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதனையடுத்து அவரது நண்பர் ரொமாவோ, கொலைகாரன் சான்டோஸ் மற்றும் அவரது மற்றொரு முன்னாள் காதலி ரோசா ஆகியோர் திட்டமிட்டு கடந்த 2010ம் வருடம் சாமுடியோவை கொலை செய்துள்ளனர். பின்னர் அவற்றை கூறு போட்டு வளர்ப்பு நாய்க்கு உணவாகவும் போட்டுள்ளனர். இதற்கு டி சோசாவின் மனைவியும் உடந்தை என கூறப்படுகிறது. மீதமிருந்த உடலை புதைத்துள்ளனர். இந்த வழக்கில் ரொமாவுக்கு 15 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு விட்டது. சான்டோஸ் மீது அடுத்த மாதம் வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் வரை இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த டி சோசா, காதலியை கொலை செய்ய உத்தரவிட்டதாக புதன்கிழமையன்று கோர்ட்டில் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கில் அவருக்கு 22 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக