News Update :
Home » » புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 17 ஜூன், 2013 | AM 3:41

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், பயங்கரவாத வலையமைப்பு சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளின் பிரச்சாரப் பணிகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்காது அதனை எதிர்ப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாதிகள் தகவல் தொழில்நுட்பத்துறையை பாரியளவில் பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாத ஆதரவு அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமானது. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பயங்கரவாத நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் பயங்கரவாதம் தொடர்பில் சில தரப்பினர் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். ஒரு தரப்பு பயங்கரவாதிகள் ஒரு விதமாகவும் மற்றுமொரு தரப்பு பயங்கரவாதிகள் வேறு விதமாகவும் நோக்கப்படுகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger