மதுரை செல்லூரைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயுதப்படை போலீஸ்காரர் தனசேகர். உறவினர் வீட்டு விசேஷத்திற்காக இரண்டு நாள் விடுமுறை எடுத்துள்ளார். தனது நண்பரோடு விசேஷத்தில் கலந்து கொண்ட அவர், மது அருந்தியுள்ளார். மது அருந்திய தனசேகரின் கையில் காசு கரைந்துபோனது.
உடன் வந்த நண்பர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில், மதுரை யானைக்கல் அருகில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் போவோர் வருவோரிடம், தான் செல்லூர் டிராபிக் போலீஸ்காரர் என்று கூறி வசூலில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்தில் சுமார் ரூபாய் 5 ஆயிரத்திற்கும் மேல் வசூல் ஆகவே, அந்த வழியாக டெம்போவில் வந்த ஒருவர் இந்த போதை போலீசிடம் சிக்கிக்கொண்டார். அவரிடம் ஆயிரம் ரூபாய் வசூ-த்துள்ளார்.
அந்த டெம்போ சென்ற 100 அடி தூரத்தில் ஒரிஜினல் போலீசார் வழிமறித்தனர். அப்போது ஆவேசப்பட்ட டெம்போ வேன்காரர், இப்போதுதானே ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மீண்டும் அபராதமா என்று வேகப்பட்டுள்ளார். டெம்போவேனை அனுப்பிவிட்டு நிஜ போலீசார் விசாரித்துக்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வசூலில் ஈடுபட்டிருந்த தனசேகர் மற்றும் அவரது நண்பரை மடக்கிய போலீசார், அவரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தான் நிஜ போலீஸ்காரர் தான், குடிக்க பணம் இல்லாததால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
போலி போலீஸ் வேடத்தில் சிக்கிய நிஜ போலீஸ்காரர் கைது
Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 11 ஜூன், 2013 | AM 11:14
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக