News Update :
Home » » புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை கண்டுபிடிக்க அரசு விசேட ஸ்கேனர் இயந்திரங்கள்

புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை கண்டுபிடிக்க அரசு விசேட ஸ்கேனர் இயந்திரங்கள்

Penulis : ۞உழவன்۞ on சனி, 27 ஜூலை, 2013 | AM 7:52

யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் வடக்கில் மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகள், பணத்தை வடமாகாணத் தேர்தலுக்கு முன் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி பகுதி ஒன்றில் பெருமளவான தங்கம் மற்றும் நகைகளை விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருப்பதாக பிரான்சில் வாழும் தமிழர் ஒருவர், பாதுகாப்புத் தரப்பிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்தவற்றில் குறித்த பகுதியில் தான் பெருந்தொகையான தங்கம் மற்றும் பணம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் இந்த தங்கம் மற்றும் பணத்தை கண்டுபிடித்து மீட்டெடுக்கும் தீவிர முயற்சியில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதற்கென கனிமப் பொருட்கள் திணைக்களம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், இலங்கைச் சுங்கத்திணைக்களம் ஆகியவற்றில் இருக்கும் தங்கத்தைக் கண்டறியும் விசேட ஸ்கேனர் இயந்திரங்களின் உதவியுடன் கிளிநொச்சிப் பகுதியில் தங்க வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கொழும்பைத் தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger