News Update :
Home » » அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த சித்தி பாரதிதேவி

அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த சித்தி பாரதிதேவி

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 19 ஜூலை, 2013 | AM 4:34

ஐதராபாத்தில் இருந்த அஞ்சலியை சென்னைக்கு அழைத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்ததே அவரது சித்தி பாரதிதேவிதான். ஆனால், ஆரம்பத்தில் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வந்த அஞ்சலி, சேட்டை படத்தில் நடித்த பிறகு சேட்டை பண்ணத் தொடங்கினார்.

 திடீரென்று ஒரு நாள் ஐதராபாத்துக்கு படப்பிடிப்புக்கு போன இடத்தில் மாயமானார். பின்னர் சில நாட்களுக்குப்பிறகு வெளியில் தலைகாட்டிய அஞ்சலி, நான் சம்பாதிப்பதையெல்லாம் சித்தியும், அவர் கணவரும் எடுத்துக்கொள்கிறார்கள். ஐதராபாத்தில் கஷ்டப்படும் எனது பெற்றோருக்கு தருவதில்லை என்று புகார் சொன்னார்.

அதையடுத்து, சித்தியிடமிருந்து பிரிந்த அஞ்சலி, முழுசுமாக தனது பெற்றோருடன் தங்கிவிட்டவர், இப்போது அவர்கள் இருக்கிற பக்கம் தலைவைத்துகூட படுப்பதில்லையாம். இந்தநிலையில், நான்தான் அஞ்சலியை கஷ்டப்பட்டு சினிமாவில் ஆளாக்கினேன். அதனால் எனக்கு அவர் மாசம் ரூ.50ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அஞ்சலியின் சித்தி பாரதி தேவி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.

பிரச்னை தீர்ந்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த அஞ்சலிக்கு சித்தியின் இந்த புதிய மனு தாக்கல் மீண்டும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger