இந்தியாவின் பின்னணியுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபைக்கான முதன்மை வேட்பாளராக, தான் தெரிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
“அவ்வாறான ஊடகச் செய்திகளை நான் பார்த்தேன். அதில் எந்த உண்மையும் இல்லை.
இந்தியாவில் இருந்து எவரும் என்னிடம் பேசவும் இல்லை, இந்தியாவில் எவருடனும் நான் பேசவும் இல்லை.” என்று அவர் நெத் எவ்எம் வானொலிக்குத் தெரிவித்துள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு பெரும்பான்மை சிங்களத் தலைமைகள் எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு அவர்,
“மக்களைப் பாதுகாக்கவே காவல்துறை அதிகாரங்கள் தேவை என்றும், ஒரு மாகாணத்தின் காணி விவகாரங்களில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அதற்கு வெளியில் உள்ளவரிடம் கிடையாது“ என்றும் பதிலளித்துள்ளார்.
“அவ்வாறான ஊடகச் செய்திகளை நான் பார்த்தேன். அதில் எந்த உண்மையும் இல்லை.
இந்தியாவில் இருந்து எவரும் என்னிடம் பேசவும் இல்லை, இந்தியாவில் எவருடனும் நான் பேசவும் இல்லை.” என்று அவர் நெத் எவ்எம் வானொலிக்குத் தெரிவித்துள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு பெரும்பான்மை சிங்களத் தலைமைகள் எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு அவர்,
“மக்களைப் பாதுகாக்கவே காவல்துறை அதிகாரங்கள் தேவை என்றும், ஒரு மாகாணத்தின் காணி விவகாரங்களில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அதற்கு வெளியில் உள்ளவரிடம் கிடையாது“ என்றும் பதிலளித்துள்ளார்.
கருத்துரையிடுக