Home »
ஈழம்
» இராணுவத்தினருக்கு கரும்புலி தினக் காய்ச்சல்! வடமராட்சியில் கறுப்பு கொடி கட்டுவதற்கு தடை
இராணுவத்தினருக்கு கரும்புலி தினக் காய்ச்சல்! வடமராட்சியில் கறுப்பு கொடி கட்டுவதற்கு தடை
Penulis : ۞உழவன்۞ on வியாழன், 4 ஜூலை, 2013 | AM 6:21
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு வடமராட்சி பகுதியில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறையில் தற்கொலை செய்து கொண்டுள்ள முச்சக்கரவண்டி சாரதியொருவருக்காக, துக்கத்தை அனுசரிக்கும் பொருட்டு அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகளை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.
இதனைத் தட்டிக் கேட்டவர்களையும் இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்த இராணுவத்தினருடன் சமரசம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு ரோந்துப் பணிகளும் இராணுவத்தினரால் மூடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அண்மித்த பகுதிகளில் இராணுவப் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக