News Update :
Home » » பிரபாகரனை முன்னிறுத்தி பரப்புரை செய்கிறது கூட்டமைப்பு

பிரபாகரனை முன்னிறுத்தி பரப்புரை செய்கிறது கூட்டமைப்பு

Penulis : ۞உழவன்۞ on புதன், 11 செப்டம்பர், 2013 | AM 10:15

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று வவுனியாவில் ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்போது சொன்னதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

சிலர் இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தால், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அவர்கள் கோரிய விடயங்கள் அதில் இருப்பதைக் காணலாம்.

பிரபாகரனை நாட்டைத் துண்டாட அனுமதிக்காத நான், வேறு எவரையும் அதைச் செய்ய அனுமதிக்கமாட்டேன்.
இந்த அரசாங்கம், இனப்பாகுபாடுகளை உறுதியாக எதிர்க்கிறது. எல்லா மதங்களையும் நாம் மதிக்கிறோம்.
இலங்கையர்கள் என்ற வகையில் இந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்று வடக்கிற்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

வடக்கில் காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger