இலங்கை அரசு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறியது முற்றிலும் உண்மை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொலன்னாவ சேதவத்தை வெரகொட புராண விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறியது உண்மையே. நாட்டில் ஜனநாயக உரிமைகள் இல்லாமல் போகும் போது சர்வாதிகார நிலைமை ஏற்படும்.
தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
நான் ஒருபோதும் எனது அரசியல் நடவடிக்கைகளில் கே.பி போன்றவர்களை இணைத்து கொள்ள மாட்டேன். இது சாதாரணமான ஜனநாயக சமூகத்தில் நடக்காது.
ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் விசாரணை நடத்த இந்தியா கே.பியை கேட்டுள்ளது. இப்படியான ஒருவரை எமது தேர்தல் மேடையில் இணைத்து கொள்ளும் போது, அது இந்தியாவை ஆத்திரமடைய செய்யும் என்பது ஆச்சரியமான விடயமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொலன்னாவ சேதவத்தை வெரகொட புராண விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறியது உண்மையே. நாட்டில் ஜனநாயக உரிமைகள் இல்லாமல் போகும் போது சர்வாதிகார நிலைமை ஏற்படும்.
தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
நான் ஒருபோதும் எனது அரசியல் நடவடிக்கைகளில் கே.பி போன்றவர்களை இணைத்து கொள்ள மாட்டேன். இது சாதாரணமான ஜனநாயக சமூகத்தில் நடக்காது.
ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் விசாரணை நடத்த இந்தியா கே.பியை கேட்டுள்ளது. இப்படியான ஒருவரை எமது தேர்தல் மேடையில் இணைத்து கொள்ளும் போது, அது இந்தியாவை ஆத்திரமடைய செய்யும் என்பது ஆச்சரியமான விடயமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக