News Update :
Home » » பிறந்த சிசுவை உடன் புதைத்த தாய்! கணவன் வெளிநாட்டில்..??

பிறந்த சிசுவை உடன் புதைத்த தாய்! கணவன் வெளிநாட்டில்..??

Penulis : ۞உழவன்۞ on வியாழன், 7 நவம்பர், 2013 | AM 5:44

பிறந்தவுடனேயே கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்திலிருந்து பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர்.
இன்று (07) அதிகாலை 4 மணியளவில் புதைக்கப்பட்ட மேற்படி சிசுவின் சடலம் இன்று பிற்பகல் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவைப் பிரசவித்த தாய் மற்றும் பாட்டி ஆகியோரே அச்சிசுவை கொன்று புதைத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேலாங்கன்னி (வயது 25) என்ற பெண்ணே மேற்படி சிசுவை பிரசவித்துள்ளார். அப்பெண், தனது தாயாரான தங்கவேலு காளியம்மா (வயது 63) என்பவருடன் இணைந்தே சிசுவை கொன்று புதைத்துள்ளார்.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிவகுமார் வேலாங்கன்னி, இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டு மலசலகூடத்துக்கு அருகில் வைத்து சிசுவை பிரசவித்துள்ளார். பின்னர் அவரே தான் பிரசவித்த சிசுவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அது தொடர்பில் தனது தாயாரான காளியம்மாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர்.







குழந்தையைப் பிரசவித்த வேலாங்கன்னிக்கு அதிகளவில் இரத்தோட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger