சிறிலங்காவுக்கு எதிராக ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்குப் பிந்திய நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்கா சீர்குலைப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
“ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியாவில் தனது சொந்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் அமெரிக்கா எதற்காக அக்கறை காட்டுகிறது என்று உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.
மேற்குலகின் இந்த இரட்டைவேடம் குறித்து கடந்த திங்கட்கிழமை ஸ்டீபன் ராப்பையும், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனையும் சந்தித்த போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
முன்னாள் லிபிய அதிபர் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும் அவர்களிடம் நினைவுபடுத்தியிருந்தேன்.
வன்னியில் போரின் போது கையாளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனிதாபிமானப் பணியகத்தின் அறிக்கைகளின் மூலமே அறிந்து கொள்ளலாம்.
சில அமெரிக்க அதிகாரிகள் இங்குள்ள களநிலவரங்கள் குறித்து எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.
தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின்“ போருக்கு சிறிலங்காவும் ஒத்துழைப்பு வழங்கியது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியாவில் தனது சொந்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் அமெரிக்கா எதற்காக அக்கறை காட்டுகிறது என்று உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.
மேற்குலகின் இந்த இரட்டைவேடம் குறித்து கடந்த திங்கட்கிழமை ஸ்டீபன் ராப்பையும், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனையும் சந்தித்த போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
முன்னாள் லிபிய அதிபர் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும் அவர்களிடம் நினைவுபடுத்தியிருந்தேன்.
வன்னியில் போரின் போது கையாளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனிதாபிமானப் பணியகத்தின் அறிக்கைகளின் மூலமே அறிந்து கொள்ளலாம்.
சில அமெரிக்க அதிகாரிகள் இங்குள்ள களநிலவரங்கள் குறித்து எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.
தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின்“ போருக்கு சிறிலங்காவும் ஒத்துழைப்பு வழங்கியது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக