யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம்! TNA தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும் கோஷம்..
Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 15 நவம்பர், 2013 | 6:03 AM
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகவும்
தமிழத்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷம் எழுப்புவதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, பொது நூலகத்திற்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வாகனங்களை அங்கிருந்து நகரவிடாமல் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக