News Update :
Home » » தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!

தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!

Penulis : ۞உழவன்۞ on புதன், 2 ஏப்ரல், 2014 | PM 4:45

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலுள்ள கழிவு உலோக களஞ்சியசாலையொன்றில் இரண்டாம் உலகப்போர் கால குண்டென சந்தேகிக்கப்படும் குண்டொன்று இன்று புதன்கிழமை வெடித்ததால் குறைந்தது 6 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

 பணியாளர்கள் அந்த குண்டை வெட்டி திறக்க முயற்சித்தபோதே அது வெடித்துள்ளது.

நிர்மாணத்தளமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குண்டை நிர்மாணப் பணியாளர்கள் செயலிழந்த குண்டெனக் கருதி கழிவு உலோகங்களை சேகரித்து விற்பதில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் விற்றுள்ளனர்.

இதனையடுத்து கழிவு உலோகக் களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்ட அந்த குண்டில் உள்ள உலோகப் பகுதியை பிரித்தெடுக்க பணியாளர்கள் முயற்சித்தபோது அது வெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பால் குறிப்பிட்ட களஞ்சியசாலை மட்டுமல்லாது அருகிலுள்ள வீடுகளும் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger