News Update :
Home » » தலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் பிணம்

தலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் பிணம்

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 4 ஏப்ரல், 2014 | AM 5:57

டெல்லியின் ஜனக்பூரி பகுதியில் ஒரு பஸ் நிறுத்தம் அருகே  மர்ம பை ஈ மொய்த்த படியும் நாய்கள் அதை சுற்றி  மோப்பம் பிடித்தபடியும் கிடந்தது. இதை வருவோரும் போவோரும் பார்த்தபடி சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

உடனடியாக போலீசார் வந்து அந்த பையை சோதனை செய்தனர். பையை சோதனை செய்த போது பைக்குள் தலையில்லாத பெண்ணின் பிணம் ஒன்று இருந்தது. அந்த பெண்ணின் உடம்பு  நிர்வாண நிலையில் காணப்பட்டது அந்த பெண்ணிற்கு 30 முதல்- 35 வயது இருக்கும்.

பெண்ணின் உடம்பில் ஆங்காங்கே ரத்த காயங்கள் இருந்தன. யாரோ அந்த பெண்ணை  கொலை செய்து நிர்வாண நிலையில் பையில் திணித்து அங்கு போட்டுள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்த பெண் கற்பழிக்கபடவில்லை என போலீசார் மறுத்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger