
நேற்றைய தினம் அமெரிக்கா நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமைச் செயலகம் முன்பாக தமிழர்கள் கண்டன போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பான் கீ மூனின் வருகையை ஒட்டி அங்கு திரண்ட தமிழ் மக்கள் இறுதிப்போரில் 20,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது ஐ.நா சபை மற்றும் பான் கீ மூனினால் தடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர். இலங்கை இராணுவத்தினர் கனரக ஆயுதங்களைப் பாவித்தது மற்றும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் படைச்சேர்ப்பில் ஈடுபட்ட இலங்கை அரசு தனது படைப்பலத்தை 3 லட்சமாக உயர்த்தியதற்கு ஐ.நா ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கேள்வியும் எழுப்பினர்.தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களையும் விடுவிக்கக்கோரி அமெரிக்க தமிழர்களால் இப் போராட்டம் முன்னெட்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக