தென்மராட்சிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் 29 வயதுடைய சின்னராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பாலாவிப் பகுதியில் ட்ரக்ரர் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைமந்த நிலையில் மீட்கப்பட்ட சின்னராசா சுதர்சன் கொடிகாமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் 2 பிள்ளைகளின் தந்தையாவார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி நீதிமன்றம் மேற்கொள்கின்றது.
கொடிகாமம் பாலாவிப் பகுதியில் ட்ரக்ரர் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைமந்த நிலையில் மீட்கப்பட்ட சின்னராசா சுதர்சன் கொடிகாமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் 2 பிள்ளைகளின் தந்தையாவார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி நீதிமன்றம் மேற்கொள்கின்றது.
கருத்துரையிடுக