
சட்டவிரோதமான முறையில் வன்னி மக்களை சிறீலங்கா அரசு தடுத்து வைத்துள்ள வதைமுகாம்களை இழுத்துமூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கும், G-20 நாடுகளின் தலைவர்களுக்கும் அவசர மனுக்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பி வைத்துள்ளது.ஏற்கனவே யுத்தத்தாலும், உள்ளக இடப்பெயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்கள் தன்னுரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும், இவர்களின் முழுமையான சுதந்திர வாழ்வை உறுதிசெய்வது உலகத் தலைவர்களின் கடப்பாடு என்றும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக