
நெதர்லாந்தில் “டென் காக்” இலுள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக, சிறீலங்கா அரசால் தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை உடன்விடுவிப்பதற்கு உதவுமாறுகோரி கவனயீப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. இதன்போது நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சகத்தில் சிறீலங்காவிற்குப் பொறுப்பான நெதர்லோப் அம்மையாரைச் சந்தித்து நெதர்லாந்தின் பலஇடங்களிலும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதிகளை இவ்அம்மையாரிடம் ஒப்படைத்து, முகாம்மக்களை விடுவிக்கஉதவுமாறு உரையாடினர். இதன்போது கருத்துத்தெரிவித்த அம்மையார், மகிந்தஅரசானது இவ்விடயத்தில் பிடிவாதமாக உள்ளதாகவும் ஆனால், இம்மக்களை விடுவிக்க ஐரோப்பியஒன்றியம் மூலமாக தாங்கள் தொடர்ந்தும் முயற்சிசெய்வதாக தெரிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக