
24 வயதுடைய இவர் ஓய்வு பற்றி குறிப்பிடுகையில்,
"தற்போதுள்ள சூழ்நிலையில் நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கு அதிக நெருக்கடி கொடுக்கப்பட்டது. எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் நீடிக்கிறது. "என்றார் ஹைதர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4ஆவது போட்டியில் 19 ஓட்டங்கள் எடுத்து வெற்றிகான ஷாட்டையும் ஆடினார் சுல்கர்னைன் ஹைதர்.
அந்த போட்டிக்கு முன்பு அவரை சூதாட்டக்காரர் ஒருவர் இறுதி 2 ஒரு நாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோற்க ஒத்துழைக்கவேண்டும் இல்லையெனில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக ஹைதர் ஜியோ தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
அதாவது அவர் விடுதியில் இரவு உணவு எடுத்துக் கொள்ளச் சென்றபோது ஒருநபர் தன்னை அணுகியதாகவும் அவருடன் இரண்டு 3 பேர் இருந்தனர் என்றும் கூறினார் ஹைதர். அந்த நபரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் உருது பேசினார் என்றும் கூறியுள்ள ஹைதர், அவர்கள் தங்களுடன் ஒத்துழைத்தால் நிறைய பணம் பார்க்கலாம் என்றும் இல்லையேல் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டிவரும் என்று மிரட்டியதாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவர் துபாயிலிருந்து மர்மமான முறையில் வெளியேறி லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
இந்த நிலையில் ஐ.சி.சி. பார்வைக்கு இந்த விவகாரம் சென்றுள்ளது. ஐ.சி.சி. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் ஹைதர் ஏன் ஓடி ஒளிந்தார், பாகிஸ்தான் அணி மேலாளரிடம் இதனை ஏன் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஹைதர் இதுகுறித்துக் கூறுகையில், அவர்களிடம் கூறினால் ஒன்று எனக்கு பிரச்சனைகள் அதிகமாகும் அல்லது அவர்களுக்கு அதிகமாகும் இதனால் நான் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக