
சூதாட்ட தரகர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக அவர் வெளியிட்டுள்ளதையடுத்து இந்ந விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூதாட்டத் தரகர்களுக்கு பயந்து லண்டன் சென்றுள்ள ஹைதர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4ஆவது போட்டியில் விளையாடினார்.
அந்த போட்டிக்கு முன்பு அவரை சூதாட்டக்காரர் ஒருவர் இறுதி 2 ஒரு நாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியுற ஒத்துழைக்கவேண்டும் இல்லையெனில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக ஹைதர் கூறியிருந்தார்.
சூதாட்ட விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர் ஹைதர்,சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை விசாரிக்க ஸ்கொட்லாந்து பொலிஸார் முடிவு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துரையிடுக