News Update :
Home » » மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர்

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர்

Penulis : Antony on வெள்ளி, 10 டிசம்பர், 2010 | AM 8:38


ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார்.

இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இதுபற்றி அவர் கூறும்போது,

என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். இன்னும் 50 ஆண்டுகளில் மனிதர்கள் நிச்சயமாக சந்திரனில் குடியேறி விடுவார்கள். அப்போது நாங்களும் அங்கு குடியேறுவோம் என்றார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger