ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்.
அந்த வகையில் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
அதற்கு மேலாக அவ்வாறு சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் எதுவிதமான உள்நோக்கங்களும் இருப்பதாக கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆயினும் எதிர்வரும் காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய வைபவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு தான் அமைச்சரவையிடம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை: டக்ளஸ்
Penulis : Antony on சனி, 25 டிசம்பர், 2010 | AM 5:51
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக