வன்னி இறுதி யுத்தம் முடிவடைந்த பிற்பாடு 2010 ஆம் ஆண்டில் மட்டும் தென்னிலங்கையைச் சேர்ந்த 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் இரண்டு இலட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாடசாலை விடுமுறைக் காலங்களான ஏப்ரல், ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலேயே அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்தைத் தரிசித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள கடற்கரைகள், போர் இடம்பெற்ற பகுதிகள், மத வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைப் பார்வையிடும் நோக்கிலேயே அதிகளவான தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதாக கூறப்படுகின்றது.
வெந்த மண்ணில் விடுப்புப் பார்க்கும் சிங்களவர்கள்
Penulis : Antony on ஞாயிறு, 26 டிசம்பர், 2010 | AM 1:57
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக