
வவுனியா - சூசைப்பிள்ளையார் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றிலிருந்து 06 கிளைமோர் குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியிலுள்ள வீடொன்றின் மதிலை உடைக்கும் போது இக்கிளைமோர் குண்டுகள் கிடப்பதை கண்ட வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் இக்கிளைமோர் குண்டுகளை மீட்டுள்ளனர்.
இக்குண்டுகள் தலா 08 கிலோகிராம் நிறையை உடையதாகவும் நீண்ட காலத்திற்கு முன் இங்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகத்துடன் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை வவுனியாப் பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
கருத்துரையிடுக