News Update :
Home » » மருத்துவமனையில் கடமை நேரத்தில் மது அருந்திப் பாட்டி - நோயாளியைக் கொண்டுசெல்ல முடியாது என கூறிய அம்புலன்ஸ் சாரதி

மருத்துவமனையில் கடமை நேரத்தில் மது அருந்திப் பாட்டி - நோயாளியைக் கொண்டுசெல்ல முடியாது என கூறிய அம்புலன்ஸ் சாரதி

Penulis : Antony on வெள்ளி, 31 டிசம்பர், 2010 | AM 9:26

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்தியசாலையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு குறித்த வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிச் சாரதி மது அருந்தியதனால் வரமுடியாது என கூறியுள்ளாராம்.
இது பற்றி தெரியவருவதாவது:

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 29.12.2010 ஆம் திகதி அன்று இரவு 8.00 மணியளவில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நோயாளி அனுமதிக்கப்பட்டு பின்பு இவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது.

அந்த நேரத்தில் குறித்த வைத்தியசாலையில் ஒரு பிரியாவிடை பாட்டி நடைபெற்றதாம். இதனால் அம்புலன்ஸ் வாகன சாரதியும் அந்த பாட்டியில் மது அருந்திக்கொண்டிருந்தாராம். இதனால் தன்னால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வர முடியாதென கூறினாராம்.

இதனால் நோயாளியின் உறவினர்கள் மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் அவர்களை தொடர்பு கொண்டு விடயத்தை சொல்ல அரியநேத்திரன் அவர்கள் தனது வாகனத்தை அனுப்பி குறித்த நோயாளியை மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்த்திருக்கிறார்.

குறித்த இந்த விடயமாக பா.அரியநேத்திரன் அவர்களிடம் கருத்து கேட்டபோது மேற்படி சம்பவம் நடைபெற்றதை தான் உறுதிசெய்வதாகவும் அத்துடன், வைத்தியசாலையில் கடமை நேரத்தில் ஒரு அலுவலர் மது அருந்திவிட்டு தனது கடமையை செய்யமுடியாதென கூறுவதானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் கூறினார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger