
ஐ.நா நிபுணர்குழுவுக்கு சாட்சியங்களை சமர்ப்பிபதற்கான கால எல்லை கடந்த 15ம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
ஆயினும் இந்தக் கால எல்லை மேலும் நீடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த 15ம் திகதி நண்பகல் இன்னர் சிற்றி பிரஸ் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று நிபுணர்குழுவிடம் சேராமல் திரும்பியுள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.
அத்துடன் மறுநாள் அதிவிரைவு பொதி விநியோக சேவை மூலம் சாட்சியங்களை ஐ.நாவின் முகவரிக்கு ஆனுப்பிய போதும் அதைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு யாரும் இல்லை என்று திருப்பி அனுப்ப்ப்பட்டுள்ளதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தவிடயத்தில் நிபுணர்குழு அக்கறையின்றி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள இன்னர் சிற்றி பிரஸ், உள்ளக அறை நிரம்பியதால் மின்னஞ்சல் திரும்பியிருந்தாலும் அதிவிரைவுப் பொதி விநியோக சேவையின் ஊடாக அனுப்பிய சாட்சியங்களும் திரும்பியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வரைக்கும் ஐ.நா நிபுணர்குழுவுக்கு 1100 சாட்சியங்கள் கிடைத்துள்ளன.
ஆயினும் எத்தனை நிராகரிக்கப்பட்டன அல்லது திரும்பின என்பது கவனிப்புக்குரிய விடயம் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக