News Update :
Home » » கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் நடுங்கும் மஹிந்தர்

கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் நடுங்கும் மஹிந்தர்

Penulis : Antony on திங்கள், 20 டிசம்பர், 2010 | PM 1:37


இன்று எனக்கு பஸ்ஸிலிலும் செல்ல முடியாதுள்ளது. விமானத்திலும் செல்ல முடியாதுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் நான் இந்த நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தமையே. நான் இன்று ஒரு போத்தலுக்கு அடைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறேன்.

என்னால் முழுமையாகச் சாப்பிடவும் முடியாதுள்ளது. சாப்பிடும்போது யாராவது ஒருவர் வந்து அதன் ஒரு பகுதியினைப் பறித்துக் கொண்டு செல்கிறார். மேற்கண்டவாறு தெரிவிப்பது வேறு யாருமல்ல..

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே… கொழும்புப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக் கழக மாணவர்களால் ஜனாதிபதியின் படமொன்று போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட அவர், இது போன்றுதான் வாழ்க்கையும் என ஒப்புவித்துக் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்று எனக்கு பஸ்ஸிலும் போக முடியாதுள்ளது. விமானத்தில் செல்ல முடியாதுள்ளது. இவ்வாறு எனது சுதந்திரம் பறிக்கப்பட்டமைக்கான காரணம் நான் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தமையே ஆகும்.

இன்று எனக்கு பிரித்தானியாவுக்குச் செல்ல முடியாதுள்ளது. அங்கு சென்றால் என்னைக் கைது செய்யப் பிடி விறாந்துடன் ஓடி வருகிறார்கள். இவைகளை நான் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் உங்களையெல்லாம் என்னால் பாதுகாக்க முடியும். எனத் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger