News Update :
Home » » மானிப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணியின் சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணியின் சடலம் மீட்பு

Penulis : Antony on வியாழன், 13 ஜனவரி, 2011 | AM 11:14

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள மிகவும் பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று காலை மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சின்னராஜ நாகரத்தினம் (வயது 76 ) என்ற வயோதிபப் பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர் இன்று அதிகாலை எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றபோது தவறி கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger