
வெள்ளத்தால் பாதிப்படைந்த கிழக்கு மாகாண மக்களுக்காக யாழ்ப்பாண செயலக ஊழியர்களினால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட தொகுதி ஒன்று இன்று கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண செயலக ஊழியர்களின் ஒரு நாள் வேதனமான சுமார் 16 லட்சம் ரூபா நிதியின் மூலம் பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களே அரச அதிபர் இமேல்டா சுகுமாரின் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று மாலை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக