
ஐரோப்பிய தமிழ் சமூகத்தின் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியம், தனது பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கக் கோரும், வெகுசனப் போராட்ட முன்னெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 சனவரி) தமிழர் நடுவம் - பிரான்சினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழர் நடுவம்
Hochgeladen von valarytv. - Neueste Nachrichten Videos.
சமீபத்தில் மறைந்த ஊடகவியாலாளர் சுப்பிரமணியம் சிவநாயகம் ஐயா அவர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் என பன்முகத் தளத்தில் இருந்து பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆறுமாதத்திற்கு ஒரு தடவை, ஐரோப்பிய ஒன்றியத்தினால் புதுப்பிக்கப்பட்டு வரும் பயங்கரவாத பட்டியல் தொடர்பிலான முடிவினை கருத்தில் கொண்டு, எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர், இந்த வெகுசன போராட்டத்தின் மக்கள் கையொப்பங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்படைப்பதென்றும், தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் இதனை முன்னெடுப்பதென்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் பீடத்தால் முன்வைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தங்களது முழுமையான உறுதுணையை வழங்குவதோடு, அதனுடைய செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதெனவும் எடுத்துரைக்கப்பட்டது.



கருத்துரையிடுக