புலிகள் பயன்படுத்திய நவீன துப்பாக்கி தெவிநுவர தபால் ஊழியரிடம் மீட்பு
Penulis : Antony on சனி, 8 ஜனவரி, 2011 | AM 10:50
விடுதலைப்புலிகளால் பயன்படுத்தி வந்ததாகக் கருதப்படும் நவீன ரக ரி 56 ரக துப்பாக்கியையும் அதற்குரிய 48 ரவைகளையும் தெவிநுவர அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடமிருந்து கடந்த பொலிஸார் புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
இவரின் வீட்டு மேல் மாடியில் உரப்பையினுள் வைக்கப்பட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவருக்கு மீனவர் ஒருவர் இத்துப்பாக்கியையும் ரவைகளையும் வழங்கியுள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
அந்த மீனவரைப் பொலிஸார் தேடிச்சென்றபோது அவர் மீன் லொறியில் பயணம் சென்றுகொண்டிருந்ததாகவும் பொலிஸாரைக் கண்டுவிட்டு தப்பிச்சென்று விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னிலங்கையில் இடம்பெற்று வந்த பெரும்பாலான கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வருவோருக்கு இந்த ஆயுதத்தையும் தோட்டாக்களையும் இவர் இரண்டு இலட்சம் ரூபா வீதம் வாடகைக்குக் கொடுத்து வந்ததாகவும் வாடகையால் கிடைக்கும் பணத்தை மீனவரும் தானும் பகிர்ந்து கொள்வதாகவும் சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த நவீன ரக ரி 56 ரக துப்பாக்கியை படையினரோ,பொலிஸாரோ பயன்படுத்துவதில்லை என தென்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த தெரிவித்தார்.
38 வயதான சந்தேக நபரை பொலிஸார் தடுத்துவைத்து விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய மீனவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக