ஒன்றுபட்ட தேர்தல் கூட்டணி முயற்சியில் தமிழ்க் கட்சிகள்
Penulis : Antony on சனி, 8 ஜனவரி, 2011 | AM 10:32
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஒன்றுபட்ட தமிழ்க் கட்சிகளின் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளுக்கிடையே தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. இதனை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.
புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்க் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கான கூட்டம் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் அமைப்பு, ஸ்ரீடெலோ அமைப்பு, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இது தொடர்பில் நேற்றிரவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து தமிழ்க் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி முடிவு தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்க முடியும் என எம்.கே.சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக