விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்குவதில் தாங்கள் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக சிறிலங்காவின் அலுவலர்கள் கூறுகிறார்கள்.
மே 2009ம் ஆண்டு சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவந்தபோது விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 11,000 பேர் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்திருந்தார்கள். இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அரச படையினரே முன்னெடுத்து வந்தனர்.
குறிப்பிட்ட சில விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் சமூகத்துடன் இணைந்துவாழ அனுமதிப்பது சிக்கல் நிறைந்ததாக மாறியிருக்கிறது என சிறிலங்காவினது அதிகாரிகள் பி.பி.சியிடம் கூறியிருக்கிறார்கள்.
விடுவிக்கப்பட்ட சில முன்னாள் போராளிகள் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இருந்தும் புனர்வாழ்வின் பின்னர் முன்னாள் போராளிகளை விடுவிக்கும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இவ்வாறு விடுவிக்கப்படும் போராளிகளும் படையினரால் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பிறசில்சைத் தளமாகக் கொண்ட அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு கூறுகிறது.
2010ம் ஆண்டினது முதற்பகுதி முதல் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வின் பின்னர் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 5600 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் சுனந்த ரணசிங்க கூறுகிறார்.
விடுவிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் சிலர் களவு மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள் என கிராமவாசிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இவர்கள் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக ரணசிங்க கூறுகிறார்.
இன்றைய நிலையில் வெறும் 4600 முன்னாள் போராளிகள் மாத்திரமே புனர்வாழ்வினைப் பெற்றுவருவதாகவும் ஏனையவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட போராளிகள் விசாரணைக்காக மீண்டும் அழைப்பு
Penulis : Antony on புதன், 5 ஜனவரி, 2011 | PM 4:49
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக