News Update :
Home » , , , » இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள்: அடித்துச் சொல்கின்றது ஹிந்து பத்திரிகை

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள்: அடித்துச் சொல்கின்றது ஹிந்து பத்திரிகை

Penulis : Antony on ஞாயிறு, 13 மார்ச், 2011 | AM 11:13

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்பதை புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக ஹிந்து பத்திரிகை அடித்துச் சொல்கின்றது.தற்போதைய நிலையில் தமிழ்நாடு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் குறைந்திருப்பது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்ளும் ஹிந்து பத்திரிகை, ஆயினும் அயல் மாநிலங்களை நோக்கி நோக்கி அவர்கள் நகர்ந்து வருவதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது.

கேரளாவில் தற்போதைக்கு ஆயிரம் வரையான இலங்கைத் தமிழர்கள் தங்கியிருப்பதாகவும் அப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் சிறீமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் இலங்கையில் இருந்து அனுப்பப்பட்டவர்களும் அங்கிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அவ்வாறான நிலையில் தமிழ் நாட்டில் தமது செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தற்போது கேரளாவின் வனப்பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக இந்தியப் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனையொட்டி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger