ராஜபக்சவுடன் காங்., வேட்பாளர் போஸ்டர் ஒட்டப்பட்ட கார் பறிமுதல்
Penulis : Antony on செவ்வாய், 5 ஏப்ரல், 2011 | AM 2:44
இலங்கை அதிபர் ராஜபக்சவுடன், ராமநாதபுரம் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருப்பது போன்று, போஸ்டர் ஒட்டப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் டொமினிக் ரவி, இளங்கோ மற்றும் ஜெரோன்குமார் ஆகியோர், நேற்று ராமேஸ்வரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவஹிருல்லாவை ஆதரித்து, பாம்பன் பகுதியில் பிரசாரம் செய்தனர்.
இவர்கள் சென்ற காரில், காங்., வேட்பாளர் ஹசன் அலி இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் இருந்து கேடயம் வாங்குவது போன்ற படத்துடன், "கொலைகார கை சின்னத்திற்கு வாக்களிக்காதீர்" என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வேட்பாளர் ஹசன் அலி, தன்னை பற்றி நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்வதாக போலீசில் புகார் செய்தார்.
பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட இண்டிகா காரை, பாம்பன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக