
அபார வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி திரும்பினார்.
அதிமுக வெற்றி பெற்றது குறித்து அறிந்த பிரதமர் மன்மோகன்சிங் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இவர்கள் இருவருக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கருத்துரையிடுக