மட்டக்களப்பில் இரு மாணவர்கள் கடலில் மூழ்கி மரணம்
Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 24 ஜூன், 2011 | AM 12:42
மட்டக்களப்பபில் உள்ள மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கடலில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் அதே ஊரைச் சேர்ந்து புண்ணியமூர்த்தி வினோதராஜ் (14 வயது) மற்றும் தங்கத்துரை டிசாந்தன் (14 வயது) என்பவர்களே நீரில் மூழ்கி மரணமாகி உள்ளனர்.
ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள நிலையில் மற்றவரின் சடலத்தை பிரதேச வாசிகள் தேடி வருகின்றனா்.
இன்று வெள்ளிக்கிழமை காலையில் மற்றைய மாணவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக