மக்கள் தொடர்பு அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி அமைப்பாளருமான மேர்வின் சில்வாவின் ஏற்பாட்டில் களனி பிரேசத்தின் பழைய கண்டி வீதியில் அந்தக் கட்சியின் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
ஜிமல்கா, ஆன் ஆகியோருக்குச் சொந்தமான வீடே தற்போது ஶ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமாக உருமாறியுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னணி ஆதரவாளர்களாக ஒருகாலத்தில் செயற்பட்டு வந்தனர்.
இவர்களது தந்தை 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய இளைஞர், யுவதிகள் பலரை களனி பிரதேசத்தில் கொலை செய்த சம்பவத்துடனும் தொடர்புபட்டிருந்தார்.
”ஜிமல்கா மற்றும் ஆன்” ஆகிய இருவரும் கடந்த காலத்தில் குறித்த வீட்டை விலைமாதர் விடுதியாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த விலை மாதர் விடுதிக்கு அமைச்சர் மேர்வின் சில்வாவினால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து குறித்த வீட்டின் ஒரு பகுதி தற்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகமாக பயன்படுத்திக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வீட்டின் ஒரு பகுதியில் விலைமாதர் விடுதியை உத்தியோகபூர்வமாக நடத்திச் செல்வதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா அனுமதியளித்துள்ளார்.
கருத்துரையிடுக