காணாமல் போன பிள்ளைகளுக்கு பதிலாக தென்னம்பிள்ளைகளாம்; இராணுவ அதிகாரி தெரிவிப்பு
Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 15 மார்ச், 2013 | AM 10:07
காணாமல் போன உறவுகளுக்கு பதிலாக அவரின் உறவினர்களுக்கு விரைவில் தென்னம்பிள்ளைக்கள் வழங்கப்படும் என பரந்தன் இராணுவ சிவில் நிர்வாகத்திற்கு பெறுப்பான இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மேற்படி பிரதேசத்தில் யுத்த காலத்தில் காணமல் காணமல்போன உறவினர்களை பரந்தன் இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள சிவில் நிர்வாக காரியாலயத்திற்கு அழைத்த இராணுவத்தினர் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
இக் கலந்துரையாடலில் காணாமல்போன நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் உறவுகள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இக் கலந்துரையாடல் காணாமல் போன பிள்ளைகள் தொடர்பில் நல்ல முடிவு ஒன்று கிடைக்கும் என நம்பிச் சென்ற உறவுகளுக்கு உங்களுக்கு விரைவில் தென்னம் பிள்ளைகள் வழங்கப்படும் என இராணுவ அதிகாரி தெரிவித்ததும் கூடியிருந்த உறவுகளுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
வருகின்ற காலங்களில் காணாமல் போன உறவுகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் போது முன்னுரிமை வழங்கப்படும் இதன் ஒரு கட்டமாக விரைவில் தென்னம்பிள்ளைகள் வழங்கப்படும் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காணாமல் போன பிள்ளைகளுக்கு பதிலாக தென்னம்பிள்ளைகள் தருவதாக கூறியமையானது தங்களையும் தங்கள் உணர்வுகளையும் ஏளனம் செய்வது போன்று அமைந்துள்ளதாக இவ் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் கொழும்பில் நடைபெறவிருந்த காணாமல் போன உறவுகளின் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்திய நிலையில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாராவது கலந்து கொண்டார்களா? அவரின் பெயர் விபரங்களை கிராம சேவவை அதிகாரிகளிடம் சென்று பெற்றுக் கொள்வதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக